செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கொச்சியில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.  
செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது
Published on
Updated on
1 min read

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கொச்சியில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 
பல முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அமலாக்கத்துறை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட அசோக் குமார் தில்லி அல்லது சென்னைக்கு அழைத்துச் செல்லப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 
செந்தில் பாலாஜி சகோதரர் கட்டிவரும் புதிய வீட்டை கடந்த வாரம் அமலாக்கத்துறை முடக்கியிருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.62 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக, சென்னை மத்தியக் குற்றப் பிரிவு கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. 
அதேவேளையில் இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிவா்த்தனை நடைபெற்ாக அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக கடந்த ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. 
தற்போது அமலாக்கத் துறை, தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com