அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு நாளைமுதல்(ஆக.18) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிரிட்டனை வழிநடத்த நானே சரியான பிரதமர்: ரிஷி சுனக்
இப்பதவிக்கு வின்ணப்பிக்க ஆக.18 மதியம் 1.00 மணி முதல் செப்.18 மதியம் 1.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.