பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசுப் போக்குவரத்துக் கழக இணையதளம் முடங்கியது ஏன்?

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் முடங்கியது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2023, 11:02 am

DIN


சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் முடங்கியது.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இணையதளத்தை நாடியதால் இணையதளம் முடங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 18ஆம் தேதி மதியம் 1 மணி முதல் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே, பிற்பகல் 1 மணிக்கு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்க ஏராளமானோர் இணையதளத்தை அணுகியதால் இணையதளம் முடங்கியதாகக் கூறப்படுகிறது.

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருக்கும் நிலையில், ஒரே நாளில் இணையதளம் முடங்கியது, விண்ணப்பிக்க முயன்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.