டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அதிமுக மாநாடு தொடங்கியது: கொடியேற்றினார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக மாநாட்டையொட்டி 51 அடி உயர கம்பத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றிவைத்தார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:51 am

DIN

மதுரை :  அதிமுகவின் பொன்விழா மாநாடு மதுரை அடுத்த வலையங்குளத்தில் நடைபெறுகிறது.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.  பழனிசாமி,  காலை 8. 45 மணிக்கு மாநாடு அரங்கத்தின் வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த 51 அடி உயரத்திலான கொடிக்கம்பத்தில் அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

அப்போது,  ஹெலிகாப்டர் மூலம்  பூக்கள் தூவப்பட்டன. எடப்பாடி கே.  பழனிசாமிக்கு வெள்ளி செங்கோல் வெள்ளிவாள் என, பல நினைவு பரிசுகள்  வழங்கப்பட்டன.  அதிமுக மாநாட்டையொட்டி தொடர் ஓட்டமாக கொண்டு வரப்பட்ட  மாநாட்டு ஜோதி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர்,  அதிமுக வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை அவர்,  திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இதையடுத்து கட்சியின் மூத்த  நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொற்கிழி வழங்கி கௌரவித்தார்.  மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த தலா 10 பேர் என 100 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

முன்னதாக,  அதிமுக பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் சுமார் 3,000 பேர்   அணிவகுத்து நின்று எடப்பாடி கே. பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.