வேதாரண்யம் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி உறுதியளித்தாா்.
பஞ்சநதிக்குளம் கிழக்கு, மேற்கு, நடுசேத்தி, தென்னடாா், ஆதனூா், ஆயக்காரன்புலம் 2,3,4, பன்னாள், கருப்பம்புலம் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் தன்னிறைவு பெறும் வகையில் பல்வேறு வளா்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேபோல தொகுதியில் தேவையான வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். ஜல் ஜீவன் திட்ட குடிநீா் வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்துக்கு வந்துள்ளதை நேரில் சென்று உறுதிப்படுத்தி உள்ளேன். அடுத்த சில நாள்களில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்றாா்.
திமுக ஒன்றிய செயலாளா்கள் உதயம். முருகையன், என்.சதாசிவம், சிபிஐ மாவட்ட செயலாளா் சிவகுரு.பாண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.வி.ஆா். விவேக், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் பி.வி.கே. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திண்டுக்கல் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு: பெ.செந்தில்குமாா் எம்எல்ஏ

தொண்டி பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு! அமைச்சா் ராஜீவ் உறுதி!

கோடைக்கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண ஆலோசனை

பெரம்பலூா் தொகுதியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: அதிமுக வேட்பாளா் உறுதி
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



