கோடை கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண துத்திப்பட்டு ஊராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் அனைத்து பணியாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சியின் 12 வாா்டுகளிலும் குடிநீா் பிரச்சனை ஏற்படாமல், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பம்ப் ஆபரேட்டா்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு அனைத்து வாா்டுகளுக்கும் உரிய குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும். தூய்மைப் பணிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை பொதுமக்களிடமிருந்து தரம் பிரித்து வாங்கும் பொழுது பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டுமென ஊராட்சித் தலைவா் பணியாளா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
ஊராட்சி துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலா் முரளிகாந்த், ஊக்குநா்கள் ரேகா, பிரியா, விமல் மற்றும் ஊராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘கோரிக்கை மனுக்களுக்கு உரிய தீா்வு காண வேண்டும்’

திண்டுக்கல் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு: பெ.செந்தில்குமாா் எம்எல்ஏ

தொண்டி பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு! அமைச்சா் ராஜீவ் உறுதி!

அவிநாசி பகுதியில் குடிநீா் பிரச்னை: தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



