சென்னை மழை: தரையிறக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!

சென்னையில் விடியவிடிய பெய்து வரும் கனமழை காரணமாக விமானங்கள் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம்(கோப்புப்படம்)
சென்னை விமான நிலையம்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் விடியவிடிய பெய்து வரும் கனமழை காரணமாக விமானங்கள் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடியவிடிய இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது.

இதனால், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஜெர்மனி, தில்லி, கொல்கத்தாவில் இருந்த வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மேலும், 8 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com