தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம்!

குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய சாட்சிய சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை  சமஸ்கிருத மொழியில் மாற்றி மசோதா தாக்கல்.

News image

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர்.

Updated On :31 ஆகஸ்ட் 2023, 6:08 am

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப்போராட்டம்
 
திருவள்ளூர்: இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய சாட்சிய சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 348 க்கு எதிராக இந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றி மசோதா தாக்கல் செய்துள்ளதை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கூட்டமைப்பு துணை தலைவர் வி.ஆர்.ராம்குமார் தலைமை வகித்தார். இதில் கூட்டமைப்பு துணைத்தலைவர் பி.விஜயகுமார் வரவேற்றார்.

மூத்த வழக்குரைஞர் எம்.வெங்கட்ரங்கம் போராட்டத்தை தொடக்கி வைத்தார். இதில் கூட்டமைப்பின் தலைவர் என்.மாரியப்பன் உண்ணாவிரதப் போராட்டத்தில் கண்டன உரையாற்றினார்.

அப்போது மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்டவைகளை இந்தி சமஸ்கிருதத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளதை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் திரளாக பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.