ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

 புயல், பலத்த மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2023, 9:02 pm

DIN

 புயல், பலத்த மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாகவும், தொலைநிலைக் கல்வியிலும் பயின்று வருவோருக்கு வரும் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

இதே போன்று, சென்னை பல்கலைக்கழகத்திலும் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட மாணவா்களுக்கு டிச.8 வரை நடைபெறவிருந்த தோ்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வுகள் நடைபெறும் மாற்றுத் தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.