சென்னை: நெல்லூருக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள மிக்ஜம் புயல் இன்னும் சற்றுநேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் திங்கள்கிழமை முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது.
நேற்று பிற்பகல்வரை சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவு வரை நெருங்கி வந்த நிலையில், ஆந்திரக் கரையை நோக்கி சென்னைக்கு வடக்கே நெல்லூருக்கு தென்கிழக்கே மாலை நகரந் தொடங்கியது.
தற்போது நெல்லூருக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள புயல், நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே இன்னும் சற்றுநேரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை நெருங்கியுள்ளதால் நெல்லூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
மேலும், புயல் கரையைக் கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.