மிக்ஜம் புயல் பாதிப்பு: நாளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்!

முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்திக்கவுள்ளார். 
மிக்ஜம் புயல் பாதிப்பு: நாளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்!

சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (டிச.7) நேரில் பார்வையிடவுள்ளார். 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்திக்கவுள்ளார். 

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. 

பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மிக்ஜம் புயல் மழைக்கு சென்னையில் கடந்த இரு நாள்களில் மட்டும் 19 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டவற்றை சரி செய்யவும் சீரமைப்புப் பணிகளுக்காகவும் நிதி வழங்கி உதவுமாறு தமிழ்நாடு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (டிச. 7) தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடவுள்ளார். 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலினையும், அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com