சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (டிச.7) நேரில் பார்வையிடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்திக்கவுள்ளார்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மிக்ஜம் புயல் மழைக்கு சென்னையில் கடந்த இரு நாள்களில் மட்டும் 19 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்டவற்றை சரி செய்யவும் சீரமைப்புப் பணிகளுக்காகவும் நிதி வழங்கி உதவுமாறு தமிழ்நாடு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (டிச. 7) தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலினையும், அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


