திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 7) விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 7) விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ள நீர் வடியாததால் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பை அறிவித்துள்ளது.

முன்னதாக கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டது

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழக்குன்றம் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை(டிச.7, வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதேபோல், சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com