மேட்டூர் அணை நீர்வரத்து இன்று (டிச. 10) காலை 8.00 மணி நிலவரப்படி 3,412 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (டிச. 10) காலை 68.53அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,297 கன அடியிலிருந்து 3,412 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 31.45 டிஎம்சியாக உள்ளது.