இது தொடர்பாக மாற்று இடம் கேட்டபோது, பீரங்கி மேடு பகுதியில் இடம் தருவதாகவும், அதற்கு தலா ரூ.2 லட்சம் முன் பணம் தர வேண்டும் எனவும், மாத வாடகை தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், நிரந்தர கட்டடமாக அல்லாமல், தற்காலிகமாக தகர சீட் அமைத்துக் கொள்ளுமாறும் மாநகராட்சி அலுவலர்கள் கூறினர். இதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில், இப்போது திடீரென வந்து முன்னறிவிப்பின்றி காலி செய்யுமாறு கூறுகின்றனர். இதனால் இதை நம்பி வாழும் ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மீண்டும் அகதிகளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.