ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி மூலவருக்கான பாலாலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2023, 9:29 am

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி மூலவருக்கான பாலாலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உடையது காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரர் திருக்கோயில். இந்த கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முதலாவது பாலாலய கும்பாபிஷேகம் கடந்த 11.2.2022 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மூலவர் கச்சபேசுவரருக்கான 2-ஆவது பாலாலாய கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 12 -ஆம் தேதி கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜை ஆகியன நடைபெற்றன. 13 -ஆம் தேதி புதன்கிழமை அத்திமரத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாக காட்சியளிக்கும் கச்சபேசுவரருக்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை சுயம்பு மூர்த்தியாக இருந்து வரும் கச்சபேசுவர சிவபெருமானுக்க பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோயில் பூஜகர்கள் சுப்பிரமணிய சிவாச்சாரியார்,பிரபாகர் சிவாச்சாரியார் ஆகியோர் கச்சபேசுவரருக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்தார்கள். 

இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயத்தில் பந்தல்கால் நடும் விழாவும் நடைபெற்றது.

பாலாலய கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் செங்குந்த மகாஜன சங்க தலைவர் எம்.சிவகுரு,செயலாளர் கே.சுப்பராயன், திருப்பணிக்குழுவின் தலைவர் எஸ்.பெருமாள், ஆசிரியர் ஜீவரெத்தினம், அறநிலையத்துறை ஆய்வாளர் பிரீத்திகா, வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்வேலன், ஓதுவார் த.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.