கனமழை பாதிப்பு: வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு!
தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை பாதிப்புகளைத் தெரிவிக்க வாட்ஸ் அப், டிவிட்டர் கணக்குகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை பாதிப்புகளைத் தெரிவிக்க வாட்ஸ் அப், டிவிட்டர் கணக்குகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையானது அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என வானிலை ஆய்வு மையம்
ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்த நிலையில், கனமழை பாதிப்புகளைத் தெரிவிக்க தமிழக அரசு வாட்ஸ்அப் எண்களை வெளியிட்டுள்ளது. மேலும் டிவிட்டர் மற்றும் முகநூல் வழியாகவும் மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 81485 39914 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மழை பாதிப்பு உதவி தேவையை மக்கள் தெரிவிக்கலாம். மேலும், @tn_rescuerelief, @tnsdma என்ற ட்விட்டர், @tnsdma என்ற பேஸ்புக் பக்கத்திலும் மழை பாதிப்பைக் குறித்துப் பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...