அமைச்சர் பொன்முடி விடுவிப்பு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமைச்சர் பொன்முடி விடுவிப்பு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து பிறப்பித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக அறிவித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதம் சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் விடுவித்து தீர்ப்பளித்திருந்தது.

கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில், அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்துக்கு சொத்து சோ்த்ததாக அமைச்சா் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு வேலூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை’ எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து கடந்த ஜூன் 28-ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த தீா்ப்பை எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவு தரப்பில் இதுவரை சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், குற்ற விசாரணை சட்டம் 391- ஆவது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்காக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்தார். 

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், டிசம்பர் 21ஆம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்றும், அன்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com