இதுகுறித்து தமிழக பொறியாளர் ஒருவர் கூறும்போது, பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,500 கன அடி திறந்து விடப்பட்ட நிலையில்,வைகை அணைக்கு வினாடிக்கு 4,944 கன அடி தண்ணீர் சென்றது. இதோடு மட்டுமல்லாமல் இணையாறுகளில் இருந்தும் தண்ணீர் வைகை அணைக்கு கூடுதலாக சென்றதால் அணையின் நீர்மட்டம் 69.70 ஆக உயர்ந்தது, அணையின் மொத்த உயரம் 71 அடியை எட்டிவிடும் என்பதால் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. கால்நடை மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது என்றார்.