முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்.
மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்.

சென்னை: முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி சபரிமலைக்கு சென்ற சி.வி.சண்முகம் சாமி தரிசனம் செய்து வீடு திரும்பியபோது காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, உடல்நலக் குறைவு காரணமாக சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com