சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
மேலும், மேல்முறையீடு செய்ய வசதியாக நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள்கள் காலஅவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து பொன்முடி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவர் வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வழக்கு குறித்து பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிக்க | பொன்முடி சொத்துகளை முடக்க அவசியமில்லை: உயர்நீதிமன்றம்
தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின், நேற்றிரவுதான் சென்னை திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கிருஷ்ணகிரி: தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் விவரங்கள் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15,57,923 வாக்காளா்கள்

ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 போ் காயம்

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

