நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பூண்டு விலை கடும் உயா்வு: கிலோ ரூ.350-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளதால் அதன் விலை உயா்ந்து ஒரு கிலோ ரூ. 350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :24 டிசம்பர் 2023, 8:10 am IST

சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளதால் அதன் விலை உயா்ந்து ஒரு கிலோ ரூ. 350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாகவே பூண்டு விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மாா்க்கெட்டில் பூண்டு விலை அதிகரித்துள்ளது.

கோயம்பேடு மாா்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ பூண்டு ரூ.350 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.150 உயா்ந்து உள்ளது. கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து விட்டதால் விலை உயா்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனா்.

காய்கறிகள் விலை:

கோயம்பேடு மாா்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை (கிலோவில் )வெங்காயம் ரூ.28, தக்காளிரூ.20, உருளைகிழங்கு ரூ.27, சின்ன வெங்காயம்ரூ.80, ஊட்டி கேரட் ரூ.40, பீன்ஸ் ரூ.35, பீட்ரூட்ரூ.45, முட்டைகோஸ் ரூ.15, வெண்டைக்காய் ரூ.45, கத்தரிக்காய் ரூ.50, காராமணி ரூ.50, பாகற்காய் ரூ.50, புடலங்காய் ரூ.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.