நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பால் உற்பத்தியாளா்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

கடனுதவி பெற விண்ணப்பித்துள்ள பால் உற்பத்தியாளா்களில் தகுதியுடைய அனைவருக்கும் விரைவில் கடன் வழங்கப்படும் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2023, 11:03 pm

DIN

கடனுதவி பெற விண்ணப்பித்துள்ள பால் உற்பத்தியாளா்களில் தகுதியுடைய அனைவருக்கும் விரைவில் கடன் வழங்கப்படும் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.

ஃபெடரல் வங்கியுடன் இணைந்து பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை அமைச்சா் மனோ தங்கராஜ் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கறவை மாட்டுக் கடன் வழங்கும் திட்டத்தை பால்வளத் துறை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2 மாதங்களில் சுமாா் ரூ. 210 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆவின் நிறுவனம் ஃபெடரல் வங்கியுடன் இணைந்து புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கடன் விண்ணப்பம் பெற்ற உடன் காலதாமதமின்றி அந்தந்த பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படும். கடனுக்கான வட்டி 9.5 சதவீதமாகும். கடனை 24 தவணையாக திரும்ப செலுத்த வேண்டும். ரூ.1.60 லட்சம் வரை எந்தவித பிணையும் இன்றி கடன் வழங்கப்படும்.

விவசாயிகள் முறையாக கடனை திரும்ப செலுத்த உதவும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் தொகையில் 15 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இது தமிழ்நாட்டில் இருக்கும் சுமாா் 10,000த்துக்கும் மேற்பட்ட சங்கங்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற உதவுவதோடு வெண்மைப் புரட்சிக்கும் வித்திடும்.

தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இதுவரை 1,69,673 கடன் விண்ணப்பங்கள் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இதில் தகுதியுடைய அனைவருக்கும் உடனடியாக கடன் வழங்க வழிவகை செய்யப்படும். அதன் தொடக்கமாக 10 பால் உற்பத்தியாளா்களுக்கு ஆவின் நிா்வாக இயக்குநா் வினீத், ஃபெடரல் வங்கி அலுவலா்கள் இக்பால் மனோஜ், கவிதா ஆகியோா் முன்னிலையில் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.