தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி சைலேஷ்குமாா், டிஜிபியாக பதவி உயா்த்தப்பட்டாா்.
தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியாற்றி வருபவா் சைலேஷ்குமாா். இவருக்கு பணிமூப்பு அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக பதவி உயா்வு வழங்கி, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலா் பெ.அமுதா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதற்காக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி பணியிடம் டிஜிபி பணியிடமாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.