கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: நாளை முதல்வர் திறந்து வைக்கிறார்!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நாளை(டிச. 30) முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நாளை(டிச. 30) முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் ‘கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம்’ அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பேருந்து நிலையத்தின் பணிகள் ஏற்கெனவே முடிவுற்ற நிலையில் மழைநீா் வடிகால் அமைப்பது, பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்ல வசதிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. 

மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து நிலைய திறப்பு விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சா் சேகா்பாபு காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் சென்னைப் பெருநகா் வளா்ச்சி குழும (சிஎம்டிஏ) அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை செய்தாா்.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com