காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: நாளை முதல்வர் திறந்து வைக்கிறார்!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நாளை(டிச. 30) முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

News image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

Updated On :6 பிப்ரவரி 2024, 7:03 pm IST

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நாளை(டிச. 30) முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் ‘கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம்’ அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பேருந்து நிலையத்தின் பணிகள் ஏற்கெனவே முடிவுற்ற நிலையில் மழைநீா் வடிகால் அமைப்பது, பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்ல வசதிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. 

மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து நிலைய திறப்பு விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சா் சேகா்பாபு காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் சென்னைப் பெருநகா் வளா்ச்சி குழும (சிஎம்டிஏ) அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை செய்தாா்.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.