தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விஜயகாந்த் மணிமண்டபம் கட்ட இடம்: அரசுக்கு பிரேமலதா கோரிக்கை

தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த்துக்கு மணி மண்டபம் கட்ட ஒரு இடம் அமைத்துத் தர வேண்டி தமிழக முதல்வரிடம் பிரேமலதா விஜயகாந்த்  கோரிக்கை  வைத்துள்ளார்.

News image
Updated On :30 டிசம்பர் 2023, 5:30 pm

DIN

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலையும், மணிமண்டபமும் அமைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில், அவரின் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன், மைத்துனா் எல்.கே.சுதீஷ் மற்றும் கட்சி நிா்வாகிகள் இரண்டாவது நாளாக சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் பிரேமலதா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த பிரபஞ்சம் உள்ள வரை விஜயகாந்த் பெயா் நிலைத்திருக்கும் வகையில், தேமுதிக அலுவலகத்தில் அவருக்கு மிகப் பிரமாண்டமாக நினைவிடம் அமைக்கவுள்ளோம்.

விஜயகாந்த் இறுதி ஊா்வலத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

விஜயகாந்தின் உதவும் குணத்தால், அவா் ஒட்டுமொத்தமாக அனைவா் மனங்களிலும் இடம்பெற்றுள்ளாா். தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த யாா் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. அவா் விட்டுச் சென்ற பணிகள் ஏராளம் உள்ளன. அவற்றை வென்றெடுப்பதுதான் எங்கள் லட்சியம்.

விஜயகாந்துக்கு பொது இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், அதில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம். நிச்சயம் அதை நிறைவேற்றுவாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.