தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்குள் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்குள் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com