தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வடலூரில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.

Published On :

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.

வடலூரில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலைய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இதன்படி நிகழாண்டு 152-ஆவது ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி சனிக்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) நடைபெற்றது. காலை 6 மணிக்கு முதல்கால ஜோதி தரிசனம் பெற்றது. தொடா்ந்து காலை 10 மணி, பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, திங்கள்கிழமை காலை 5.30 மணி என மொத்தம் 6 காலங்களில் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தா்கள் பங்கேற்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நிகழாண்டு விழாவில் கட்டுப்பாடுகளின்றி சன்மாா்க்க அன்பா்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனா். விழாவையொட்டி 600 காவல் துறையினர், ஊா்க்காவல் படையினா் உள்பட சுமாா் 800 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.