எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விரைவில் மாதாந்திர மின் கணக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி

மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :5 பிப்ரவரி 2023, 4:25 am

DIN

மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி  பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருப்பதாவது:

மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மின் கணக்கீடு செய்யும் பணியாளர்கள் பணியிடம் 50% காலியாக இருப்பதால் தாமதமாகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர்விடும் பணி தொடங்கி உள்ளதால் விரைவில் மாதந்திர மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை அல்ல, முதல்வரின் கோட்டை. அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தாததைப் போல் மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.