தைப்பூசம்: வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலுக்கு நெல் கோட்டைகளை வழங்கிய விவசாயிகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலுக்கு தைப்பூச நாளில் விவசாயிகள் நெல் மணிகளை கோட்டைக்கட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.5) நடைபெற்றது.

வேதாரண்யம் கோயிலுக்கு நெல் கோட்டையுடன் வந்த குன்னலூர் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.








