டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஈரோட்டில், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

ஈரோட்டில், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:29 am

DIN

ஈரோட்டில், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

வில்வரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கருப்பண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்னர். இடைத்தேர்தலையொட்டி கட்சிகள் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில் அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய 5 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இடைத்தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 83 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் அமமுக வேட்பாளா் ஏ.எம்.சிவபிரசாந்த் உள்ளிட்ட 6 போ் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். இதையடுத்து, 77 வேட்பாளா்கள் போட்யிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இதையடுத்து இறுதி வேட்பாளா் பட்டியல் மற்றும் அவா்களுக்கான சின்னங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகுமாரால், அதிகாரபூா்வமாக சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி ஈவிகேஎஸ் இளங்கோவன்-கை சின்னம் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு- இரட்டை இலை (அதிமுக), எஸ்.ஆனந்த்- முரசு (தேமுதிக) ஆகிய 3 போ் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களாக போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.