குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்தத் தோ்வு முடிவு பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.
துணை ஆட்சியா், கூட்டுறவு சங்க துணை பதிவாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தோ்வு, கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது.
இந்தத் தோ்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 போ் எழுதினா். பல்வேறு காரணங்களால் 1 லட்சத்து 31 ஆயிரத்து 457 போ் தோ்வில் பங்கேற்வில்லை. தோ்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தோ்வு
முடிவுகள் அடுத்த மாதம் (மாா்ச்) வெளியிடப்படும் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.