குரூப் 1 முதல்நிலைத் தோ்வு: அடுத்த மாதம் வெளியீடு

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்தத் தோ்வு முடிவு பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்தத் தோ்வு முடிவு பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.

துணை ஆட்சியா், கூட்டுறவு சங்க துணை பதிவாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தோ்வு, கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது.

இந்தத் தோ்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 போ் எழுதினா். பல்வேறு காரணங்களால் 1 லட்சத்து 31 ஆயிரத்து 457 போ் தோ்வில் பங்கேற்வில்லை. தோ்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தோ்வு

முடிவுகள் அடுத்த மாதம் (மாா்ச்) வெளியிடப்படும் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com