கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: நாகையில் பரபரப்பு!

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது  இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் வலைகளை பறித்துச் சென்றனர்.
கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொண்டுவரப்பட்ட மீனவர்
கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொண்டுவரப்பட்ட மீனவர்
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது  இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் வலைகளை பறித்துச் சென்றனர். கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொண்டுவரப்பட்ட மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் கடந்த 6 மாதகளாக ஓய்ந்திருந்தது.

இந்நிலையில், நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 14 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, சந்துரு, மாதேஷ், சிவபாலன், ஆகாஷ் ஆகிய 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

புதன்கிழமை (பிப்.15)  நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு 4 படகுகளில் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் மீனவர் முருகனின் இடது கையின் மூன்று விரல்கள் வெட்டப்பட்டது. 

தொடர்ந்து தமிழக மீனவர்களின் படகில் இருந்த மீன், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், தூண்டில் வலைகள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 

சக மீனவர்களின் உதவியோடு புஷ்பவனம் கடற்கரைக்கு கரை சென்றடைந்த மீனவர்களுக்கு, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொண்டுவரப்பட்ட மீனவர்களை கண்டு மருத்துவமனையில் வளாகத்தில் நள்ளிரவில் குடும்பத்தினரும், உறவினர்களும் குவிந்திருந்தனர்.

இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் விரல்கள் வெட்டப்பட்ட மீனவர் முருகன் நாகையில் இருந்து கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற 5 மீனவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com