வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான பாலாலயம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதற்காக பாலாலயம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 8:06 am

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதற்காக பாலாலயம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு அஷ்டபந்தன மஹா குடமுழுக்கு விழா நடைபெற்றது. தற்போது 13 ஆண்டுகளைக் கடந்துள்ளதால் குடமுழுக்கு விழாவிற்காக திருப்பணிகள் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இக்கோயிலில் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப்பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிறுவனத்தின் சார்பில் குடமுழுக்கு விழா திருப்பணிகளும் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோயில் கிழக்கு கோபுரம் மற்றும் சால கோபுரம் (சண்முக விலாசம் வாசல்) ஆகியவற்றிற்கு பாலாலயம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமாகித் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. 

காலை 8 மணிக்கு உள்பிரகாரத்தில் உள்ள யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று, அவை விமானதளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு குடமுழுக்கு விழாவிற்கான பந்தல்கால் நடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மரத்திலான கோபுரச்சிற்பங்களுக்கு ஆவாஹனம் செய்யப்பட்டு, மீண்டும் யாகசாலையில் வைத்து சிற்பங்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று, மகா மண்டபத்தில் வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர் கணேசன், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீமதிசிவசங்கரன், திருக்கோயில் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை ஆணையர் வெங்கடேஷ், பேஷ்கார் ரமேஷ், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், வேல் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.