ஈரோடு இடைத்தேர்தல்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஈரோடு இடைத்தேர்தல்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
Published on
Updated on
1 min read


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 70க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் , அமமுக சார்பில் ஏ.எம்.சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.

தேர்தலையொட்டி வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்காக மத்திய பாதுகாப்புப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com