வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருச்சி: காவலரை வெட்டிய ரெளடிகள் மீது துப்பாக்கிச் சூடு!

திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய ரெளடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2023, 9:51 am

DIN

திருச்சி: திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய ரெளடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரெளடிகள் துரைசாமி மற்றும் சோமசுந்தரத்தை காவல்துறையினர் இன்று திருச்சியில் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே தப்பிக்க முயற்சித்துள்ளனர். இவர்களை தடுக்க முயன்ற காவலர் சிற்றரசுவை அரிவாளால் தாக்கியுள்ளனர்.

Story image

இதையடுத்து, இரண்டு ரெளடிகளையும் துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளனர். கை மற்றும் கால்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இரு ரெளடிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.