காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நெல் கொள்முதல்: ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2023, 8:02 am

DIN

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் ஏற்கெனவே 19% ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதலுக்கு அனுமதி உள்ள நிலையில் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.