சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

தூத்துக்குடியில் வழக்குரைஞர்கள் சாலை மறியல் போராட்டம்

தூத்துக்குடியில் வழக்குரைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 1:55 pm IST

தூத்துக்குடியில் வழக்குரைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). வழக்குரைஞரான இவர், நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், வழக்குரைஞர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், வழக்குரைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், தூத்துக்குடி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், நீதிமன்றம் முன்பு பாளையங்கோட்டை சாலையில் வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Story image

மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் வரை தொடர் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக வழக்குரைஞர் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில்,  வழக்குரைஞர் சங்க துணைத் தலைவர் செல்வின் பர்ணாந்து, செயலர் மார்க், வழக்குரைஞர்கள் யு.எஸ்.சேகர், சுரேஷ்குமார், அதிசயகுமார், மாடசாமி, எஸ்.எஸ்.பி அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.