விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அதிமுக வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: என்ன சொல்கிறது ஓபிஎஸ் தரப்பு?

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் என தீர்ப்பில் கூறப்படவில்லை என்றும், மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

News image
ஓபிஎஸ் தரப்பினர் செய்தியார்கள் சந்திப்பு
Updated On :24 பிப்ரவரி 2023, 11:20 am

DIN

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் என தீர்ப்பில் கூறப்படவில்லை என்றும், மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஓ. பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையல், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். பொதுக்குழுவைத்தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிடவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தை நாட முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து  உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் எதுவும் கூறப்படவில்லை. மேலும் பொதுக் குழு தீர்மானங்கள் நடைமுறைக்கு வரவில்லை. காகிதத்தில் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளனர்.

தனிக்கட்சி தொடங்குவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும். உயர் நீதிமன்றத்தை நாடுவோம். மக்களிடம் சென்று நீதி கேட்போம் என்று பதிலளித்துள்ளனர்.

தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். தர்ம யுத்தத்துக்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உங்களுக்கு பின்னடைவா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தங்களுக்கு எந்தவிதமான பின்னடைவும் இல்லை என்றும் தற்போதுதான் தங்கள் தரப்பு தொண்டர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும் பதிலளித்துள்ளனர்.

ஓபிஎஸ் அணியினர் திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுவதாகக் செய்திகாளர்கள் சொன்னதற்கு, 
எடப்பாடி பழனிசாமிதான் திமுகவின் பி டீமாக செயல்பட்ட வருகிறார். நாங்கள் எந்தக் கட்சிக்கும் எந்த டீமும் இல்லை. திமுகவின் ஏ முதல் இசட் டீம் வரை அவர்கள்தான் என்றும் பதிலளித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.