புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடா் குடியிருப்பு மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுநீர் கலக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளானது.
இந்த விவகாரத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேங்கைவயல் கிராமம், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றக்கோரியும் சம்பவத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.