கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வேங்கைவயல் விவகாரம்: சிபிஐ-க்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

News image
வேங்கைவயல் கிராம குடிநீர்த் தொட்டி
Updated On :25 பிப்ரவரி 2023, 12:45 pm

DIN

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடா் குடியிருப்பு மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுநீர் கலக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளானது. 

இந்த விவகாரத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேங்கைவயல் கிராமம், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ அல்லது  சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றக்கோரியும் சம்பவத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.