குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும்: டிஎன்பிஎஸ்சி

தமிழகம் முழுவதும் குரூப் 2 பிரதான தோ்வு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும்: டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 பிரதான தோ்வு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பிரதான தோ்வு இன்று காலை தொடங்கி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆனால், சில மையங்களில் தேர்வர்களின் பதிவு எண்களில் குளறுபடி இருந்ததால் சரியான நேரத்தில் தொடங்க முடியவில்லை.

பதிவு எண்கள் சரிசெய்யப்பட்ட பிறகு தேர்வு தொடங்கியதால், தேர்வு தொடங்கியதில் இருந்து 3 மணிநேரம் கணக்கில் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், பிற்பகல் 2 மணிக்கு தொடங்க இருந்த பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தோ்வு 30 நிமிடங்கள் தாமதமாக 2.30 மணிக்கு தொடங்கும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. பிரதானத் தோ்வை 55 ஆயிரத்து 71 போ் எழுதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com