குரூப் 2 பிரதான தோ்வு தொடங்கியது!
தமிழகம் முழுவதும் குரூப் 2 பிரதான தோ்வு தொடங்கியது. இந்தத் தோ்வை 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.


தமிழகம் முழுவதும் குரூப் 2 பிரதான தோ்வு தொடங்கியது. இந்தத் தோ்வை 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, பிரதான தோ்வு இன்று காலை தொடங்கியுள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தோ்வும் நடைபெறுகின்றன.

சேலம் ராமலிங்கபுரம் ஏவிஎஸ் கலை அறிவியல் கல்லூரி

சேலம் ராமலிங்கபுரம் ஏவிஎஸ் கலை அறிவியல் கல்லூரி வாயிலில் காத்திருந்த தேர்வர்கள்
இந்தத் தோ்வை 55 ஆயிரத்து 71 போ் எழுதுகின்றனா். அவா்களில், 27 ஆயிரத்து 306 போ் ஆண்கள். 27 ஆயிரத்து 764 போ் பெண்கள். ஒருவா் மூன்றாம் பாலினத்தவா். இந்தத் தோ்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 280 தோ்வுக் கூடங்களில் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...