கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வாணியம்பாடி அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி

வாணியம்பாடி அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியாகியுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :28 பிப்ரவரி 2023, 10:21 am

வாணியம்பாடி அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியாகியுள்ளனர்.

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி கிரிசமுத்திரம் அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

வாணியம்பாடி அடுத்த சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் நிலைத்தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் ரபீக் (13), சூர்யா (11), விஜய் (13)  ஆகிய அரசுப் பள்ளி மாணவர்கள் மீது மோதிய விபத்தில் விபத்து ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.