வாணியம்பாடி அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி

வாணியம்பாடி அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியாகியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

வாணியம்பாடி அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியாகியுள்ளனர்.

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி கிரிசமுத்திரம் அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

வாணியம்பாடி அடுத்த சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் நிலைத்தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் ரபீக் (13), சூர்யா (11), விஜய் (13)  ஆகிய அரசுப் பள்ளி மாணவர்கள் மீது மோதிய விபத்தில் விபத்து ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com