ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சென்னை சர்வதேச புத்தகக் காட்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கிவைத்தார்

சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடக்கிவைத்தார்.

News image
Updated On :16 ஜனவரி 2023, 10:40 am

DIN

சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடக்கிவைத்தார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சென்னை புத்தகக் காட்சி (பபாசி) கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சி இன்று முதல் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சர்வதேச புத்தகக் காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(ஜன. 16) தொடக்கிவைத்தார். 

Story image

ஜனவரி 16 முதல் 18 வரை 3 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் பல்வேறு நாட்டினர் கலந்துகொள்கின்றனர். சர்வதேச அளவிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழாண்டு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி மற்றும் அதிகாரிகள் பாலரும் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.