டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண வந்தவர் காளை முட்டியதில் பலி; 4 பேர் காயம்

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்த  இளைஞர் காளை முட்டியதில் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

News image
சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண வந்தவர் காளை முட்டியதில் பலி; 4 பேர் காயம்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:43 pm

DIN

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்த  இளைஞர் காளை முட்டியதில் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் கிராமத்தைச் சேர்ந்த  அரவிந்த் (29) என்ற இளைஞரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்திருந்தார். வாடிவாசலை விட்டு வெளியே வந்த காளை ஒன்று மாடு பிடி களத்தை கடந்து வெளியே ஓடி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அரவிந்தை அந்தக் காளை முட்டி கீழே தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதே போல மற்றொரு மாடு வேகமாக ஓடி வந்ததைக் கண்ட இளைஞர்கள் சிலர் காளையிடம் சிக்காமல் தப்புவதற்காக ஓடினர். இதில் தவறி விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.