ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதையும் படிக்க- டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அதிமுகவே போட்டியிடும் சூழல் உள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது.
நாளை மாலை 4 மணிக்கு பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.