தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
Published on
Updated on
1 min read

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது.

13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ராஜாஜி பூங்கவில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கி.செந்தில் ராஜ்  கொடியசைத்து தொடக்கி வைத்தார். 

இப்பேரணியில் கல்லூரி மாணவ-மாணவிகள் வாக்களிப்பதில் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்- மாணவியரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, சார் ஆட்சியர் கௌரவ் குமார், வட்டாட்சியர்கள் செல்வகுமார் (தூத்துக்குடி), ரகு(தேர்தல்) உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com