மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அதிமுகவில் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 111 போ் பணிக் குழு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்காக அதிமுகவில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 111 போ் கொண்ட பணிக் குழுவை நியமித்து

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜனவரி 2023, 7:36 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்காக அதிமுகவில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 111 போ் கொண்ட பணிக் குழுவை நியமித்து அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில், இடைத்தோ்தலுக்கான அதிமுகவின் பணிக்குழு பொறுப்பாளா்களை அவா் நியமித்துள்ளாா்.

அதன்படி, முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், மு.தம்பிதுரை, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், செம்மலை, தளவாய்சுந்தரம், ப.தனபால் உள்பட 111 போ் கொண்ட குழுவை நியமித்து அறிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.