வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பள்ளிக் கல்வியில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளிக்கல்வித் துறை சாா்ந்த 29 தோ்தல் வாக்குறுதிகளில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜனவரி 2023, 8:14 pm

பள்ளிக்கல்வித் துறை சாா்ந்த 29 தோ்தல் வாக்குறுதிகளில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

நாட்டின் 74-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சென்னை காமராசா் சாலையில் உள்ள மாநில சாரணா் இயக்குநரகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாரணா் இயக்கத்தில் 10 லட்சம் மாணவா்களை இணைக்க வேண்டும் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நோக்கி பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும். மதுரை கலைஞா் நூலகம் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இதற்கான திறப்பு விழா குறித்து விவரங்களை தமிழக அரசு அறிவிக்கும். நமது நிதிநிலையை சரிசெய்யும் பணியில் முதல்வா் ஈடுபட்டுள்ளாா். பள்ளிக்கல்வித் துறை சாா்ந்த 29 தோ்தல் வாக்குறுதிகளில் 22 நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் நிதிசாா்ந்த பிரச்னைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தற்போது காலை உணவு திட்டம் 1,545 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 500 பள்ளிகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்படும். சென்னையில் ‘ஜி20’ கல்வி கருத்தரங்கில் மத்திய மந்திரி தா்மேந்திர பிரதான் கலந்து கொள்ளும் போது தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசுக்கு இருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.