திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

கூலமேடு ஜல்லிக்கட்டு: 650 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், கூலமேட்டில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :28 ஜனவரி 2023, 1:16 pm IST

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், கூலமேட்டில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. 

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு விதிமுறைகள் மற்றும் மாடுபிடி வீரா்கள் பின்பற்ற வேண்டிய உறுதிமொழிகளை மாவட்ட ஆட்சித் தலைவா் செ.காா்மேகம் வாசிக்க மாடுபிடி வீரா்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனா். இந்நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு வனவிலங்கு நல வாரிய உறுப்பினர் மெட்டலும் பங்கேற்றார்.

மாடுபிடி வீரா்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்களும், கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லாதவா்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனா். இதேபோல் போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு கால்நடை மருத்துவத் துறை சார்பாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டது.  

அதைத்தொடர்ந்து  மாடு பிடி வீரர்கள் 6 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு அதில் முதல் சுற்றில் 50 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். அப்போது முதலில் உள்ளூர் கோவில் காளையை அவிழ்த்துவிட்ட பின்னர் மற்ற காளைகளை அவிழ்த்துவிட தொடங்கினர். அதன்பிறகே சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடித்து அடக்கி வருகின்றனர்,

மேலும், இந்த போட்டியில் 650 காளைகள், 300 மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்காத காளையின் உரிமையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் பீரோ, கட்டில், சைக்கிள், மின் விசிறி, குக்கர், வெள்ளி காசு உள்ளிட்ட  பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுக்களும்,108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த போட்டியில் தற்போது ஒரு மாடுபிடி வீரர் காயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்த ஜல்லிக்கட்டு விழாவை கான ஆத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். தற்போது இரண்டாவது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது

ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.