அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஓமன் மசூதியில் தமிழச்சி தங்கபாண்டியன்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஓமனில் உள்ள மிகப்பெரிய மசூதிக்குச் சென்றிருந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

News image
ஓமன் மசூதியில் தமிழச்சி தங்கபாண்டியன்
Updated On :7 பிப்ரவரி 2024, 6:21 am

DIN


ஓமன்: ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஓமனில் உள்ள மிகப்பெரிய மசூதிக்குச் சென்றிருந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களை நேற்று அவர் டிவிட்டரில் பகிர்ந்திருந்த நிலையில், ஓமன் மசூதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்று பகிரப்பட்டுள்ளன.

Story image

ஓமனின் தலைநகராக விளங்கும் மஸ்கட்டில் அமைந்திருக்கிறது சுல்தான் கபூஸ் பெரிய மசூதி.  இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடையுடன் சென்று மசூதியைப் பார்த்து பிரமித்துப் போனார் தமிழச்சி தங்கபாண்டியன்.

அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Story image

முன்னதாக, ஷார்ஜாவில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் பல்துறை ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன். மாநாட்டில் உரையாற்றும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Story image

அதில், ஆற்காடு இளவரசரின் வாரிசு மற்றும் திவான் நவாப்சாதா முகமது ஆசிப் அலி மற்றும் வழக்கறிஞர் - சட்ட மற்றும் பொருளாதார ஆலோசகர் அலி காலித் அல்-ஹம்மதி ஆகியோருடன் ஜனவரி 22ஆம் தேதி மாநாட்டை துவக்கி வைத்ததில் மகிழ்ச்சி என்றும் தமிழச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், வலிமை தமிழச்சி என்ற திட்டத்தின் கீழ், ஆசிரியர்களின் கற்பித்தல் - மாணவர்களின் கற்பது: இடையேயான விரிசல் என்ற தலைப்பில் உரையாற்றியது குறித்தும் பெருமைப்படுவதாகவும் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.